சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

0
211

காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 16ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், விண்ணப்பக் கல்லூரியின் சிரேஷ்ட மாணவர்களுக்கான கற்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும்இ ஏனைய பீடங்கள் ஆரம்பாகும் திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.