சமுர்த்தி திணைக்களத்தின்,ரண்விமன மற்றும் ஜயவிமனதிட்டம்: அம்பாறையில் அமுல்

0
101

சமுர்த்தி திணைக்களத்தின், ரண்விமன மற்றும் ஜயவிமன வேலைத்திட்;டத்தின் கீழ், அம்பாறை ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று 8ம் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கு, அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில், அடிக்கல் நாட்டும்
நிகழ்வு நடைபெற்றது.
சமுர்த்தி திணைக்களத்தால் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீடமைப்புக்கு வழங்கப்படவுள்ள நிலையில், பயனாளியின் பங்களிப்பாக 5 இலட்சம் ரூபாவும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
சமுர்த்தி திணைக்கள அதிகாரிகளும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்குகொண்டனர்.