சர்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகள் கௌரவிப்பு

0
142

இந்தியாவின் பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கொட்டகலையில் நடைபெற்றது.

கொட்டகலை தனியார் விடுதி ஒன்றில் இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, டுபாய், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்குபற்றிய முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில், இலங்கை வீர, வீராங்கனைகள் 9 தங்கம் உட்பட 69 பதங்கங்களை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.