சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சமூக மட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குதல், கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நிதியான விரைவான விசாரணையை முன்னெடுத்தல், மனித சித்திரவதைகளை நிறுத்துதல், பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்துதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை விரைவுபடுத்துதல். பூநகரிப் பிரதேசத்தில் பொன்னாவெளிப் பகுதியில் சுண்ணக்கல் அகழ்வையும், சீமெந்து தொழிற்சாலை அமைப்பதையும் உடன் நிறுத்துதல், மன்னார் தீவில் கனிய மண் அகழ்வை உடன் நிறுத்துதல், மன்னார் தீவில் காற்றாலை மின்சாரத்தை அமைக்காது, அதனை வேறுபகுதிக்கு மாற்றுதல் போன்ற எட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



