ஜூன் 31ஆம் திகதிக்குப் பின்னர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாக நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜூன் 31ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை, பரிமாற்றம் இன்மை காரணமாக ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முதலில் நடவடிக்கை எடுத்திருந்தது.