சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான திட்டமிடலை வெளியிட்டது யுனிசெவ்

0
125

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடியசேவை தொடர்பிலான தரவுகள் முறையாக இருக்க வேண்டும் என யுனிசெவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பொறிமுறை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான திட்டமிடலையும் விரிவாக்கங்களையும் மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும். புதிய சட்டத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பும் வலுபடுத்தப்பட வேண்டும். அத்துடன், குடும்பங்களை வலுவூட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனூடாக குழந்தைகளை தடுத்து வைத்தல், வேலைக்கமர்த்தலை முற்றாக நிறுத்த முடியும். உறுதியான சமூக சேவை, நீதிக்கான சமூகப் பணி ஆகியவை சிறுவர்களை இலங்கையில் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறை. சிறுவர் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சமூக சேவை, நீதிக்கான பணியாளர்களின் அபிவிருத்தி, திட்டமிடலுக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும். அமைச்சுகள், திணைக்களங்கள், பொலிஸ், நீதித்துறை ஆகியன பெண்கள் – சிறுவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொறிமுறையை ஸ்தாபிப்பதும் அவசியம் என யுனிசெவ் வலியுறுத்தியுள்ளது.