அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் தாம் அறிவித்தல் விடுத்ததாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்களின் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.