சிறைகளில் கைதிகள் எண்ணிக்கையைக் குறைக்க சட்டமா அதிபர் ஆலோசனை

0
213

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் எண்ணிக்கையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவால் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனைச் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.