தமிழரசு வழக்கு: தவராசா கூறிய கருத்து

0
135

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாட்டினாலேயே தமிழரசுக் கட்சியின் வழக்கு நீடித்து செல்வதாக சட்டத்தரணி கே. வி தவராசா கூறியுள்ளார்

இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்,

மேலும், ”குறித்த வழக்கை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் வழக்கின் எதிராளியான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்துள்ள ஆட்சேபனை காரணமாக வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

மேலும், இன்று சுமந்திரன் ஆட்சேபனை முன்வைக்கப்படாமல் இருந்திருந்தால் வழக்கு முடிவு பெற்று இருக்கும் எனவும் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.