சூட்சுமான முறையில் தங்க நகைகளை கடத்த முற்பட்ட தம்பதி கைது!

0
156

வெளிநாட்டு இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமான் நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமனநிலையத்திற்கு சட்டவிரோதமாக ஒரு கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையில் இந்த நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகளாவர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.