செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு

0
146

செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் முதல் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் திடீரென பழுதடைந்தது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கியும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.