கந்தளாய் கல்வி வலயத்தில் சேருநுவர பிரிவில் அமைந்துள்ள சோமபுர மாதிரி கல்லூரிக்குள் புகுந்த காட்டு யானைகள் ஆரம்ப வகுப்புகள் நடைபெறும் கட்டடத்தை சேதப்படுத்தியுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்றுஇரவு இடம்பெற்றுள்ளது.
கட்டடத்தின் சுவர்கள், கதவு, பாதுகாப்பு கம்பி வலை என்பன சேதமடைந்துள்ளதுடன், இதன் காரணமாக மாணவர்களின் படைப்புகள், மாணவர்களின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த கட்டடத்தில் வகுப்புகளை நடத்துவது அபாயகரமானது என அதன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிராந்திய கல்வி அலுவலகம் மற்றும் வனத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.