இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனக ரத்நாயக்கவை அதன் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை அனுமதிக்கப்படவேண்டும் என பாராளுமன்ற புதிய ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.