ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்த பொலிஸார் உள்ளிட்ட பலருக்கு வலைவீச்சு

0
225

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது, கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தமை மற்றும் ஜனாதிபதி கொடியை பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.