ஜனாதிபதி-மத்திய வங்கியின் ஆளுநர் இடையே கலந்துரையாடல்!

0
54

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.

இதன்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.