திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிய இடப்பற்றாக்குறைக்கு தீர்வு

0
125

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், நீண்ட காலமாக நிலவிய இடப்பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக,
பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியொன்று குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே, அரச
காணியை குத்தகைக்கு வழங்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிக்கான 30 வருட குத்தகைப் பணத்தை, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும்
பெண்னொருவர் வழங்க முன்வந்துள்ளார்.
பாடசாலைக்கான காணியை வழங்கும் நிகழ்வில்,நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ச.குகதாஸன்
உட்பட கல்லூரிச் சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.