திருகோணமலை மூதூரில் டெங்குக் கட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வு

0
21

திருகோணமலை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான, விசேட கூட்டமொன்று இன்று நடைபெற்றது.
அண்மையில் ஏற்பட் மழை வெள்ளத்தினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதோடு இதுவரை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 125 டெங்கு தொற்றாளர்கள் இணங்காணப்பட்டிருந்த பின்னணியில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை இணங்கண்டு அழித்தல், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல், டெங்கு தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.