26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் தாதியர் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை தனது தென்னம் தோட்ட காணிக்கு சென்றுள்ள குறித்த நபர் இரவு வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அவரை தேடி சென்ற வேளை தோட்ட காணியில் உள்ள சிறிய நீர் தேங்கிய மடு ஒன்றினுள் சடலமாக கிடந்துள்ளார்.

அத்துடன் அவரின் மோட்டார் சைக்கில் மற்றும் முகக் கவசங்கள் என்பனவும் அவருடையது என உறவினர்கள் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து திருக்கோவில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இடத்தினை அடையாளப்படுத்தியதுடன் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குற்றத் தடையவியல் பொலிசாருடன் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு மரணமடைந்த குறித்த நபர் தம்பிலுவில் 01யைச் சேர்ந்தவர் என்றும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிபவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles