தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டி: யாழ்.மாணவி முதலிடம்

0
232

யாழ்ப்பாணம் ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்வி கற்கும் சுவஸ்ரிக்கா செந்தூரன், தேசிய கலை இலக்கிய போட்டியில், நடாத்தப்பட்ட கையெழுத்துப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
தேசிய நிலையில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவிக்கு சான்றிதழுடன், பத்தாயிரம் ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.