தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, வவுனியாவில் மாணவர்களால் விழிப்புணர்வுப் பேரணி

0
140

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மதினா வித்யாலய மாணவர்களால், விழிப்புணர்வு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள், சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று வவுனியா மதீனா வித்யாலய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிபிபடத்தக்கது.