மத்திய மலைநாட்டில் தொடரும் கடும் மழை காரணமாக, மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், நீர் வரத்து அதிகரித்து, பொல்கொல்லை நீர்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள், ஒன்றறை மீட்டர் வீதம், இன்று பிற்பகல் முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பொல்கொல்லை காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஒரு வினாடிக்கு, 19 ஆயிரம் கன அடி நீர், விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதாக, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மகாவலி கங்கையின் நீர் அதிகரிப்பதால், பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுகங்கையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், இரத்தினபுரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.