29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தொற்றா நோய்கள் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தால் விழிப்புணர்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்
தலைமையில் இன்று இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் மாவட்ட செயலகமும் இணைந்து தொற்றா நோய்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியதுடன்,
உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
தொற்றா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்களும்
துறைசார்ந்த வைத்தியர்களால் வழங்கப்பட்டன.
சுகாதார வைத்திய அதிகாரி பிரசாந்தி லதாகரன், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திருநாவன், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீபக்குமாரன் மற்றும்
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் மருத்துவ முகாமில் பங்கேற்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles