தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதப் படையினரின் உதவி கோரப்பட்ட நிலையில், அதற்கு பாதுகாப்புத் தரப்பு ஆதரவு வெளியிட்டுள்ளது. தொல்பொருள் அடையாளங்களுக்கு சேதம் விளைவிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதையடுத்தே, பாதுகாப்புத் தரப்பினரின் உதவி கோரப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.