அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுள்ள தோல்வியை ட்ரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடமாகவுள்ளது என வெற்றிபெற்ற ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி தோல்வியை ஏற்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பில் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ட்ரம்ப் பிரசாரக் குழு வழக்குத் தொடுத்துள்ளது.
இந்நிலையில்,வெலிங்டன் மாகாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜோ பைடன் தெரிவித்தவை வருமாறு: ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது.
ட்ரம்பின் நடவடிக்கை ஜனாதிபதி பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது.
நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலிலிருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நம்புகிறேன்.
நடந்து விடும் என்ற பார்வையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன். ஜனாதிபதி ட்ரம்ப் அல்லது வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தரப்பு இதுவரை கூறிவரும் குற்றச்சாட்டுக்களுக்கு தற்போது வரை எந்த ஆதாரங்களும் இல்லை. குடியரசுக் கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.