நாடாளுமன்றத் தேர்தல்-2024 தேர்தல் நியமனக்குழு கூட்டம் வவுனியாவில்!

0
63

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் நியமனக்குழுக் கூட்டத்தன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது. இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தினார். மேலும் தகுதிவாய்ந்த பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வருமாறும் அவர்களுக்கான இடம் கட்சியில் உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.