28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்!

நாட்டில், மேலும் 639 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 14 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
கொரோனா தொற்றுக்குள்ளாகி, நேற்று முன்தினம் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
7 ஆண்களும் 7 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 16 ஆயிரத்து 321 ஆக பதிவாகியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மேலும் 639 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 49 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 9 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்பொழுது, 23 ஆயிரத்து 489 தொற்றாளர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles