நாட்டில், மேலும் 639 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 14 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
கொரோனா தொற்றுக்குள்ளாகி, நேற்று முன்தினம் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
7 ஆண்களும் 7 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 16 ஆயிரத்து 321 ஆக பதிவாகியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மேலும் 639 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 49 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 9 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்பொழுது, 23 ஆயிரத்து 489 தொற்றாளர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.