நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா மரணங்கள்!

0
140

கொரோனா தொற்றுக் காரணமாக, நாட்டில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண் ஒருவரும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 74 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 69 ஆயிரத்து 893 ஆக பதிவாகியுள்ளது.