யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை புற்றளை பகுதியில் சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் ஒன்றுடன் மோதியதில் அந்த வாகனம் உருண்டு முன்னாலுள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் கம்பம் முறிவடைந்துடன் அருகிலுள்ள மதிலிலும் மோதியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. நேற்று மாலை மந்திகை புற்றளை பகுதியில் வீடு ஒன்றில் சிசிரிவி இணைப்பை சரிபார்ப்பதற்க்காக வாகனத்தில் வந்தவர்கள் தமது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிசிரிவியை சரிபார்த்துக் கொண்டிருந்த வேளை அப்பகுதியால் சட்டவிரோத மணல் ஏற்றிவந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது மோதியது. அவ்வேளை அந்த வாகனம் உருண்டோடி முன்னால் இருந்த தொலைத்தொடர்பு கம்பத்தின் மீதும், குறித்த வீட்டு மதில் மற்றும் பாடசாலை பெயர் பலகையிலும் மோதித்தள்ளியது. இதனால் தொலைத் தொடர்பு கம்பம் முறிவடைந் துள்ளதுடன் மதிலும் ஒருபகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. அத்துடன் பாடசாலை ஒன்றின் வழி விளம்பரப்பலகையும் இடிந்து நொருங்கியதுடன் வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.