நிலவில் எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் சென்று தங்கி தமது ஆய்வை மேற்கொள்ளும் வகையில் மிகப் பிரமாண்ட குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் இந்த பிரமாண்டமான குகை இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்ய செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு சென்று தங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.