நெருக்கடியில் உள்ள மக்களுக்கு தாம் வழங்கும் ஆதரவு அரசாங்கத்திற்கான
ஆதரவாகாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை
தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி நாட்டு மக்களின் நெருக்கடியை பயன்படுத்தி அதனூடாக சுயலாபமுழைத்துக்கொள்ளும் கட்சியல்ல . மாறாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்
நட்புறவான பொறுப்புடன் செயற்படும் கட்சியாகும். வெள்ளம் ஏற்பட்டால் அந்த அனர்த்த்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை பார்ப்பதைவிடுத்து யார் ஆட்சி செய்கின்றனர் என பார்க்கப்போவதில்லை. மாறாக மக்களுக்கு ஆதரவழிக்க வேண்டும். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது யார் ஜனாதிபதி யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை. மக்களை அனர்த்த்திலிருந்து மீட்பதற்காகவே முன்வந்தோம். அதேபோன்று எரிபொருள் நெருக்கடியால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.அந்த தீர்வை பெற்றுத்தருவதற்கு ஏற்ற வகையிலான பொறுப்புடனேயே நாம் செயற்பட்டோம். ரஷ்ய அரசாங்கத்தின் உதவியுடன் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டோம். அரசாங்கம் அதில் கவனம் செலுத்தாதிருந்த போதிலும் நாம் அதற்கான வழிஅமைத்துக்கொடுத்தோம். இது அரசுக்கான ஆதரவல்ல. இது நாட்டு மக்களுக்கான ஆதரவாகும்.