நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர் அவர்களில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிர் பிழைத்த 5 பேரில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.