தாய்லாந்தின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை அடித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், அரசியலிலும் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில், மூத்த அரசியல்வாதியான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி கேட்டுள்ளார்.
பத்திரிகையாளரின் கேள்வியால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துவிட்டு கோபத்துடன் அவர் கிளம்பி சென்றுள்ளார்.