பராமரிப்பின்றி குழந்தை தொடங்கொட பிரதேசத்தில்

0
87
முறையான பராமரிப்பின்றி குழந்தை களுத்துறை தொடங்கொட பிரதேசத்தில் வளர்வதாக தெரிவிக்கப்படுகிறது.ஒன்றரை வருட காலமாக சிறுநீரகக் கோளாறு, புற்று நோய், பக்கவாதத்தால் அவதிப்படும் அப்பா, பாட்டி, தாத்தா ஆகியோருடன் இக்குழந்தை வளர்வதாக கூறப்படுகிறது.குழந்தையின் தாய் சிறுநீரக நோயாளியான கணவன் மற்றும் புற்று நோயினாலும், பக்கவாதத்தினாலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் குழந்தையை விட்டு சென்றுள்ளார்.சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தந்தை அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலையில் நோயுற்ற பாட்டியும் தாத்தாவும் குழந்தையைக் கவனித்துக் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டில் உள்ள பெரியவர்கள் மூவரும் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளத்துடன், மின்சார கட்டணம் செலுத்தாததால் அவர்களது வீட்டில் மின்சாரம் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது