27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாக்., குண்டு வெடிப்பு ஐ.எஸ்., பொறுப்பேற்பு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்து, 56 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று அங்கு சிறப்புத் தொழுகை நடந்தது.அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 56 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக வைத்து செயல்படும் துணை அமைப்பான ஐ.எஸ்., கோரசான் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர், மனித வெடிகுண்டாக செயல்பட்டதாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles