பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து!

0
15

குருவிட்ட காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் எரத்தயிலிருந்து அடவிகந்த நோக்கி பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது வேனில் 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 14 பாடசாலை மாணவர்களும் பெண் ஒருவரும் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காயமடைந்த 14 பாடசாலை மாணவர்களும் வேனின் சாரதியும் சிகிச்சைக்காக ஏரத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பாடசாலை மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள்இ இரண்டு பெண்கள் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.