அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணம் ஹாமில்டன் நகரில் தமது பிள்ளைகள் முன் ஆபாச புகைப்படங்கள் எடுத்த பெற்றோரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வரும் காவல்துறை அதிகாரியொருவரும் அவரின் மனைவியுமே தமது 2 பிள்ளைகள் முன் ஆபாச புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
இந்த தம்பதியினர் தமது பிள்ளைகளின் முன்பே ஆபாச புகைப்படம் எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . இது தொடர்பில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது இவர்களது கையடக்க தொலைபேசியில் 1000 ற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.அவற்றில் சில புகைப்படங்களில் அவர்களின் பிள்ளைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது . அந்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.