அரசாங்கத்தின் வரி அமுலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள போதிலும் பயணிகள் புகையிரத சேவை வழமைப்போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்தின் கடமைநேர உத்தியோகத்தர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
வழமைபோன்று புகையிரத சேவையை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் சுகயீன விடுமுறையில் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.