பூமிக்கு புறப்பட்டார் ஷுபன்ஷு சுக்லா!

0
2

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வு செய்த இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா விண்​கலத்​தில் பூமிக்கு திங்கட்கிழமை (14) புறப்​பட்​டார். அவரது விண்​கலம்   அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பசிபிக் கடலில் செவ்வாய்க்கிழமை (15) இறங்​கு​கிறது.

அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் திகதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு பால்​கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்​கலத்தை அனுப்​பின.

இந்த விண்​கலத்​தில் இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்​லா, அமெரிக்​கா​வின் பெக்கி விட்​சன், போலந்​தின் ஸ்லா​வோகி உஸ்​னான்​ஸ்​கி, ஹங்​கேரி​யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் திகதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தனர்.

பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் சுக்லா கடந்த 28-ம் திகதி உரை​யாடி​னார். கடந்த 3, 4, 8 ஆகிய திகதி​களில் திரு​வனந்​த​புரம், பெங்​களூரு, லக்​னோவை சேர்ந்த 500 மாணவ,​மாணவி​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். கடந்த 6-ம் திகதி இஸ்ரோ விஞ்​ஞானிகளு​டன் அவர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் ஷுபன்ஷு சுக்லா 17 நாட்​கள் தங்​கி​யிருந்​தார். அப்​போது அவர் சுமார் 60 வகை​யான ஆய்​வு​களை செய்​தார். குறிப்​பாக நெல், காராமணி, எள், கத்​தரி, தக்​காளி உள்​ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 4,000 விதைகளை சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். அந்த விதைகளை அவர் விண்​வெளி​யில் சிறப்பு பெட்​டிகளில் வைத்து முளைக்​கச் செய்​தார். இந்த ஆராய்ச்​சி​யில் இஸ்​ரோ, கேரள வேளாண் பல்​கலைக்​கழகம், ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகிய​வை​யும் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

பாசி பன்​றிக்​குட்டி என்ற நுண் உயி​ரியை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதை வெறும் கண்​ணால் பார்க்க முடி​யாது. நுண்​நோக்கி உதவி​யுடன் மட்​டுமே பார்க்க முடி​யும். இந்த நுண் உயிரி விண்​வெளி​யில் எவ்​வாறு வளர்​கிறது என்​பது குறித்​தும் சுக்லா ஆய்வு செய்​தார்.

நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இந்த பாசி வகைகள் எவ்​வாறு வளர்​கின்றன என்​பது குறித்து அவர் ஆய்வு நடத்​தி​னார். மைக்​ரோஅல்கா என்ற பாசி வகை​யை​யும் சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதன் வளர்ச்சி குறித்​தும் அவர் செய்​தார். இந்த வகை பாசி மூலம் உணவு, எரிபொருள், ஆக்​ஸிஜனை உற்​பத்தி செய்ய முடி​யும். இது எதிர்​கால விண்​வெளி பயணத்​துக்கு பயனுள்​ள​தாக இருக்​கும்.
இவை உட்பட ஒட்​டுமொத்​த​மாக 60 வகை​யான ஆராய்ச்​சிகளை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளி​யில் மேற்​கொண்​டார். விதைகள், பாசிகள் உள்​ளிட்ட அனைத்​தை​யும் அவர் பூமிக்கு கொண்டு வரு​கிறார்.

விண்வெளி பயணம் தொடக்கம்: ஷுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் பூமியை வந்​தடை​யும்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் பசிபிக் கடலில் இன்று மாலை 3 மணி அளவில் விண்​கலம் இறங்​கு​கிறது. டிராகன் விண்​கலத்​தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் மற்​றும் நாசா​வின் மீட்​புக் குழு, 4 விண்​வெளி வீரர்​களை​யும் விண்​கலத்​தில் இருந்து பத்​திர​மாக மீட்க தயார் நிலை​யில் உள்​ளனர். இதுகுறித்து இஸ்ரோ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தில் இருந்து டிராகன் விண்​கலம், பூமி​யின் சுற்று வட்​டப் பாதை​யில் பயணம் செய்​யும். படிப்​படி​யாக கீழே இறங்கி பூமி​யின் வளிமண்​டலத்​தில் விண்​கலம் நுழை​யும்​போது உராய்வு காரண​மாக சுமார் 1,900 செல்​சி​யஸ் வெப்ப நிலை ஏற்​படும். இந்த அபாய கட்​டத்தை தாண்​டிய பிறகு விண்​கலம் பாது​காப்​பாக பூமியை நோக்கி வரும். சுமார் 5.5 கி.மீ. உயரத்​தில் பாராசூட்​கள் விரிக்​கப்​பட்டு கடலில் பாது​காப்​பாக விண்​கலம் இறக்​கப்​படும்.

30 நிமிடங்​களுக்கு பிறகு கிரேன் மூலம் கப்​பல் தளத்​துக்கு விண்​கலம் தூக்​கப்​படும். இதன்​பிறகு கதவு​கள் திறக்​கப்​பட்டு 4 வீரர்​களும் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​படு​வார்​கள்​.

இதன்​பிறகு சு​மார்​ இரண்​டு ​வாரங்​கள்​, 4 வீரர்​களும்​ பல்​வேறு மருத்​துவ ஆய்​வு​களுக்​கு உட்​படுத்​தப்​படு​வார்​கள்​. இந்​த நடை​முறை​களுக்​குப்​ பிறகே ஷுபன்​ஷு சுக்​லா இந்​தி​யா திரும்​பு​வார்​. இவ்​​வாறு இஸ்​ரோ வட்​​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.