பொதுஜன பெரமுன எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு: பிரமித பண்டார தென்னக்கோன்

0
98

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தாமும் தமது தந்தையான ஜனக பண்டார தென்னக்கோனும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ள அவர் தமது தந்தை மட்டுமன்றி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு எரிமலை போன்றிருந்த போது எவரும் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வித தயக்கமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது எடுக்கப்பட்டது என பிரமித பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தின் பிரதிபலன்கள் விரைவில் தெரிய வரும் என அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே பூரண ஆதரவு வழங்கப்படும் என பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.