பொதுத்தேர்தல் தொடர்பில் 343 முறைப்பாடுகள் பதிவு!

0
58

பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை 343 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து நேற்று வரையிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாகவே 343 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 23 தேர்தல் சட்ட மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.