பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ’சிறினிவாச’!

0
6

கொழும்பு மேயரின் அதிகாரப்பூர்வ இல்லமான “சிறினிவாச”, பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார்  அறிவித்தார்.

இந்த பாரம்பரிய கட்டிடம் சமீபத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு ஒரு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்டது.

 படப்பிடிப்பு முடிந்ததும் வளாகத்திற்கு விஜயம் செய்த மேயர் தெரிவித்ததாவது,

இந்த இல்லம் கணிசமான அளவு பொது நிதியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்குறுதியளித்தபடி, இது இப்போது கொழும்பின் குழந்தைகளுக்கும், கலைகளுக்கும், பொது நிகழ்வுகளுக்கும், நகர நிர்வாகத்திற்கும் பயன்படுத்தப்படும்,” என்று கூறினார்.