நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பொருளாதார குழுவொன்றை அமைத்து செயற்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் சார்பில் பொருளாதார குழுவொன்றை நியமித்து பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான ஒழுங்குப்பத்திரத்தை சமர்ப்பித்து அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்று வருவதற்கு நான் முயற்சித்திதேன்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் இதற்கு உடன்பட்டனர்.
குறுகிய கால பொருளாதார திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற யோசனையையே நாம் முன்வைத்தோம்.
சில வேளைகளில் ஆறு மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கமாக அமையலாம். அதற்கு மேல் சில மாதங்கள் அரசாங்கம் நீடிக்கலாம்.
வாத, விவாதங்களுக்குப் பின்னர் பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான ஒரு உடன்பாட்டுக்கு வந்தமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமேயானால் ஜனாதிபதி, பிரதமர் தெரிவின் பின்னர் எமது பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று நினைக்கின்றேன்.