போக்குவரத்து விதிகளை மீறி வீதியை கடப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டைக்கு வரும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தால் நேற்று நடத்தப்பட்டது. இதில், போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதியை கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்தனர். பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு விளக்குகள் எரியும் போது வீதியைக் கடப்பதைக் காண முடிந்தது, மேலும் அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் வீதியைக் கடப்பது குறித்து பொலிஸார் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தனர். போக்குவரத்து விதிகளை மீறி வீதியை கடப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.