நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 44 கிராம் ஹெரோய்னுடன் 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக அளுபோமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுற்றிவளைப்பின்போது 5 கிராம் ஹெரோய்னுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து பெண்ணொருவர் 6 கிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிபேரிய பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 36 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கோணஹேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 22 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பர்கியுசன் வீதியைச் சேர்ந்த 34 மற்றும் 38 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பேலியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவலோக்க சுற்றுவட்டப் பகுதியில் 11 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
36 மற்றும் 42 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாலபே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோக்கந்தர பிரNதுசத்தில் 6 கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திடிய, யாசோராபுர பிரதேசத்தில் 5 கிராம்; ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்திட்டிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.