போதைப்பொருள் குற்றவாளிக்கு மரண தண்டனை

0
42

16 கிராம் மற்றும் 882 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித  மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (03) தீர்ப்பாளித்தார்.

இரு குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்ததாக முடிவு செய்த பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளியான வெலிவிட்ட சாயக்காரகே அசங்க சஞ்சீவ, ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த போது  கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.