28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போரதீவுப்பற்றில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களில் 32கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 123கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் நேற்று முன்தினம் போரதீவுப்பற்று பகுதியில் 13பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் நேற்று 19பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்களும் அவர்களின் உறவினர்களும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் கடந்த 14நாட்களில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் 157பேர் கொரனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் குறித்த ஆடைத்தொழிற்சாலை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் மூடப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles