தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன் தீபகற்பத்தில் உள்ள போஸ்னியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
16 பேர் உயிரிழந்துள்ளடன் பலர் காயமடைந்துள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சாலைகளில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலரை காணவில்லை என அறிவிக்கப்பட்டு அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.