மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பை நோக்கிய பேரணி ஆரம்பம்

0
137

‘மக்களை வதைக்கின்ற அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியானது, வாதுவ நகரில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.

வாதுவையில் ஆரம்பமான இந்த பேரணி மொரட்டுவை வரை செல்லவுள்ளது.

இதனையடுத்து நாளை காலை 9.00 மணிக்கு மொரட்டுவையிலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் பேரணி நாளை மாலை கொழும்பை வந்தடையவுள்ளது.

மக்களின் பணம் சூறையாடப்பட்டுள்ளது, சமைப்பதற்கு எரிவாயு இல்லை, வீட்டில் மின்சாரம் இல்லை போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பாரியளவிலான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாததைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியிள் இந்த மூன்று நாள் போராட்டமானது நேற்று காலை 9.00 மணியளவில் பேருவளையிலிருந்து ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.