மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் செயற்பாடுகளை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கான திட்ட முன்
மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் செயலமர்வும், மாதாந்த ஒன்றுகூடலும் இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் மனோகரன்
தலைமையில் செயலமர்வு இடம்பெற்றது.
சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்கள்
குறித்து, சர்வமத உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் அப்துல் ஹமீட், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த
சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள், சமாதான செயற்பாட்டாளர்களும் செயலமர்வில்
கலந்து கொண்டனர்.