மட்டக்களப்பு மாவட்டபட்டதாரிகளின் போராட்டம்5வது நாளை எட்டியது

0
91

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம், 5 வது நாளாக இன்றும்
தொடர்கிறது.
காந்திபூங்காவில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக இப் போராட்டம்
இடம்பெற்று வருகிறது.
பட்டங்களைப் பெற்றும், தமது தொழிலுரிமை மறுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு கோசங்களைத் தாங்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.